​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக் ரேஸில் வித்தை காட்டிய 15 பேர் கைது.... விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்

Published : Oct 14, 2024 8:15 AM

பைக் ரேஸில் வித்தை காட்டிய 15 பேர் கைது.... விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்

Oct 14, 2024 8:15 AM

சென்னை ஈசிஆரில் பைக் ரேஸில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

15 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நட்ராஜ், பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களுக்கு அறிவுரை கூறி, இனிமேல் பைக் ரேசில் ஈடுபட கூடாது என எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலைய பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.