​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Published : Oct 11, 2024 4:26 PM

தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் 18 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Oct 11, 2024 4:26 PM

வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தும் இயக்கப்பட்ட 18 ஆம்னி பேருந்துகளை, தமிழக எல்லையான ஜூஜுவாடி சோதனைச்சாவடியில் ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வந்த பேருந்துகள் மற்றும் தமிழகத்திலிருந்து கர்நாடகா சென்ற பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.