​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகைகளை திருடிய பெண்..

Published : Oct 10, 2024 4:27 PM

கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகைகளை திருடிய பெண்..

Oct 10, 2024 4:27 PM

திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மற்றும் கை செயினை திருடி, சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தையின் தாய் உணவு ஊட்டிவிட்டு அருகில் இருந்த வேறொரு பெண்ணுடன் பேசிக்கொண்டே நடந்து சென்ற நிலையில் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே சென்ற வேறொரு பெண் ஓடி வந்த குழந்தையை தூக்கிச் சென்று நகைகளை திருடிக்கொண்டு குழந்தையை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.