​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Published : Oct 09, 2024 6:15 PM

போலி சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Oct 09, 2024 6:15 PM

சென்னை ராஜமங்கலம் அருகே பள்ளி, கல்லூரி சான்றிதழ் மற்றும் நில ஆவணங்களை போலியாக தயாரித்து விற்பனை செய்ததாக கைதான 2 பேரிடமிருந்து போலி ஆவணங்கள், பிரிண்டர் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொளத்தூரைச் சேர்ந்த விஜய், ஆவடியை சேர்ந்த ரூபன் ஆகியோர் தாதங்குப்பத்தில் பத்திரிகை அலுவலகம் என்ற பெயரில் போலியாக பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் சொத்து ஆவணங்களை தயாரித்து மோசடியாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலில் காவல்துறையினர் இந்த சோதனையை நடத்தினர்.