​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி

Published : Oct 08, 2024 9:29 PM

சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி

Oct 08, 2024 9:29 PM

சென்னையிலுள்ள தனது 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, 18 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி நடிகர் கவுண்டமணி மீட்டெடுத்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள 5 கிரவுண்ட் இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, ஸ்ரீஅபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கவுண்டமணி 3.58 கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

கட்டுமானப் பணி முடியாததோடு, நிலத்தையே கையகப்படுத்த அந்த நிறுவனம் முயல்வதாகக் கூறி கவுண்டமணி தரப்பில் 2006-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தீர்ப்பு அடிப்படையில், நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்போடு அந்த இடத்திலிருந்த ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டு, கவுண்டமணி தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தனர்.