​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்

Published : Oct 07, 2024 5:38 PM

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மாநாடு... விவசாயி தாக்கப்பட்டதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம்

Oct 07, 2024 5:38 PM

கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி நேற்று நடைபெற்ற மாநாட்டில் விவசாயி ஒருவரை அடித்து வெளியேற்றியதற்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், விவசாயி சுரேஷ் என்பவர்  மேடை அருகே சென்று ஆனைமலையாறு நல்லாறு திட்டம் தீட்டி  57 ஆண்டுகள் ஆகிறது, உண்மையாகவே காங்கிரஸ் அதனை நிறைவேற்ற தீர்மானம் போடுகிறதா என கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.