​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கம்பத்தில் மோதி நொறுங்கிய கார் - 2 பெண்கள் உயிரிழப்பு

Published : Oct 07, 2024 1:25 PM

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கம்பத்தில் மோதி நொறுங்கிய கார் - 2 பெண்கள் உயிரிழப்பு

Oct 07, 2024 1:25 PM

ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி புதர் பகுதியில் கவிழ்ந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கலைச்செல்வன் விபத்து ஏற்பட்டவுடன் சீட் பெல்ட்டை கழற்றி வெளியேறியதால் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண்களின் பெயர் சௌந்தர்யா, ரிஸ்வானா என தெரியவந்துள்ளதாகவும், மற்ற விவரங்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.