​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி.. விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் இடறி விழுந்ததாக தகவல்

Published : Oct 07, 2024 1:17 PM

வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி.. விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் இடறி விழுந்ததாக தகவல்

Oct 07, 2024 1:17 PM

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் கால் இடறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தடையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் என்ற கூலி தொழிலாளியின் மகன் துரைராஜ் காலாண்டு விடுமுறையின் இறுதி நாள் என்பதால் வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி பள்ளத்தில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.