​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டிராக்டருக்கான தவணைப் பணத்துடன் தலைமறைவான ஊழியர்… விவசாயி அளித்த புகாரில் ஜான் டீர் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு..

Published : Oct 06, 2024 7:51 PM

டிராக்டருக்கான தவணைப் பணத்துடன் தலைமறைவான ஊழியர்… விவசாயி அளித்த புகாரில் ஜான் டீர் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு..

Oct 06, 2024 7:51 PM

கள்ளக்குறிச்சியில் விவசாயியிடம் பண மோசடி செய்ததாக ஜான் டீர் டிராக்டர் நிறுவனத்தின் மேலாளர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனியன் என்பவர், ஜான் டீர் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாயில் டிராக்டர் வாங்கியுள்ளார்.

தவணையை முறையாக செலுத்தி வந்த முனியன், உடல்நிலை சரியில்லாததால் 2 தவணைகளை செலுத்தவில்லை என்று கூறப்படும் நிலையில், டிராக்டரை ஜான் டீர் நிறுவனம் எடுத்துச் சென்றுள்ளது.

முழு தொகையையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால், பல இடங்களில் கடன் வாங்கி 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை நிறுவனத்துக்கு நேரில் சென்று கலக்சன் ஏஜண்ட் ரமேஷ் என்பவரிடம் கொடுத்தாகக் கூறுகிறார் முனியன்.

ஆனால் அந்தப் பணத்துடன் ரமேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் டிராக்டரைத் தர முடியாது என்றும் நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.