​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் டி.எஸ்.பி.யின் காலில் விழுந்து கதறிய கோவில் நிர்வாகி..

Published : Oct 06, 2024 7:08 PM

கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததால் டி.எஸ்.பி.யின் காலில் விழுந்து கதறிய கோவில் நிர்வாகி..

Oct 06, 2024 7:08 PM

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரமியம் கிராமத்திலுள்ள பஜனை கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே பிரச்சனை இருந்து வருகிறது.

இதில் 25 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை எதிர்தரப்பு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களையும் இணைத்து திருவிழாவை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அந்த உத்தரவை மதிக்கவில்லை என்றும் திருவிழாவில் இணைத்துக் கொள்ள மறுப்பதாகவும் போலீசார் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அண்ணாத்துரை என்பவர் டி.எஸ்.பி யின் காலில் விழுந்து கதறினார்.