​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெஸ்புல்லா, இஸ்ரேல் இடையே தீவிரமடையும் மோதல்... லெபனானை விட்டு வெளியேறத் தொடங்கிய வெளிநாட்டினர்

Published : Oct 05, 2024 12:26 PM

ஹெஸ்புல்லா, இஸ்ரேல் இடையே தீவிரமடையும் மோதல்... லெபனானை விட்டு வெளியேறத் தொடங்கிய வெளிநாட்டினர்

Oct 05, 2024 12:26 PM

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள விமான நிலையம் அருகே ஒருபுறம் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், மறுபுறம் விமானங்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றன.

லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால், பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை லெபனானிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.

ஒரு சில மேற்கத்திய நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்கள் தாயகம் திரும்ப பிரத்யேக விமான சேவைகளை ஏற்பாடு செய்துவருகின்றன.