​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது

Published : Oct 05, 2024 9:21 AM

ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது

Oct 05, 2024 9:21 AM

ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 7 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சங்க செயலாளர் சங்கர், எழுத்தர் பாரதி ஆகியோரை வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்களை பணியில் இருப்பதாக கணக்கு காட்டியது, சங்க உறுப்பினர்களின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி கடன் பெற்றது, வைப்புநிதியை கையாடல் செய்தது, செலவினங்களை அதிகபடுத்தி போலியாக கணக்கு எழுதி மோசடி நடைபெற்றது தணிக்கையில் தெரிய வந்ததால் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.