​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு

Published : Oct 04, 2024 6:03 PM

சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு

Oct 04, 2024 6:03 PM

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள அமராவதி முதலைப் பண்ணைக்கு சுற்றுலா வந்தவர்கள் தவற விட்ட 3 சவரன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்து தங்களிடம் ஒப்படைத்த சிறுவர்கள் சரவணகிரி, பிரகதீஸ் ஆகியோருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

தொலைத்த நகையை தேடி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுற்றுலா பயணியிடம்  உரிய விசாரணைக்கு பிறகு தங்கச்சங்கிலி ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.