​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்

Published : Oct 04, 2024 3:38 PM

ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்

Oct 04, 2024 3:38 PM

ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் அருகே, தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் மீது அரசு பேருந்து மோதியதில் காலணி ஆலை ஊழியர்கள் 20 பேர் காயமடைந்தனர்.

எதிர் திசையில், வளைவில் வேகமாகத் திரும்பிய கார் மீது மோதாமலிருக்க, அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை திருப்பியபோது, எதிரே வந்த வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. பள்ளத்தில் இறங்கிய வேனில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் அருகிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.