​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Published : Oct 03, 2024 6:17 AM

சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Oct 03, 2024 6:17 AM

சென்னையில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிவாரணப் பணிகளை செயல்படுத்த 10 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதீத மழைக்காலத்தில் மாநகராட்சி மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி உடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்..