​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்

Published : Oct 02, 2024 2:13 PM

நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்

Oct 02, 2024 2:13 PM

நாகை அருகே விசாரணைக்கு சென்ற தெற்குப்பொய்கைநல்லூர்  தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரான மகேஸ்வரன்காவல் நிலையத்திலேயே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் மனோகர் என்பவர் கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்து ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மகேஸ்வரனின் கார் கண்ணாடியை மனோகரின் ஆதரவாளர்கள் கல்வீசி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரில், கீழ்வேளூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றபோது மகேஸ்வரன் மீதே போலீசார் வழக்கு பதிவு செய்ய முயன்றதாகவும், இதனால் கழிவறைக்குச் சென்று தான் வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.