​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குமாரப்பாளையம் அருகே லாரி பிரேக் பிடிக்காமல் மோதியதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

Published : Oct 02, 2024 12:41 PM

குமாரப்பாளையம் அருகே லாரி பிரேக் பிடிக்காமல் மோதியதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

Oct 02, 2024 12:41 PM

குமாரபாளையத்தில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தட்டாங்குட்டை என்னும் பகுதியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி பிரேக் பிடிக்காததால் கார் மீது மோதியதில் முன்னால் சென்ற 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதிக் கொண்டன.

தேசிய நெடுஞ்சாலையில் பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது, பிரேக் பிடிக்காததால் லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அடுத்தடுத்த வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

கோயம்புத்தூரில் நடைபெற உள்ள பாரா த்ரோபால் போட்டியில் பங்கேற்பதற்காக இன்டர்நேஷனல் த்ரோபால் விளையாட்டு வீரர்கள் மனோஜ்குமார், தமிழரசன் உள்ளிட்ட 7 பேர் சென்ற காரும் விபத்தில் சிக்கிய நிலையில், இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மற்ற வாகனங்களில் வந்தவர்களில் 3 பேர் பலத்த காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.