​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்

Published : Oct 01, 2024 9:34 PM

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்

Oct 01, 2024 9:34 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்ததாக அக்கா-தங்கையை கைது செய்து, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் 400 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைதான சோட்டி, அவரது தங்கை நசீமா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதால் கடந்தாண்டே அவர்களது பட்டாசு விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.