​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது வருத்தமளிக்கிறது: ஆளுநர் ரவி

Published : Oct 01, 2024 1:57 PM

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது வருத்தமளிக்கிறது: ஆளுநர் ரவி

Oct 01, 2024 1:57 PM

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மையே சேவை என்ற கருப்பொருளில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் பேட்டியளித்த அவர், காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமளிப்பதாகவும் இது காந்தியக் கொள்கைக்கே எதிரானது எனவும் கூறினார்.