​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

Published : Sep 30, 2024 10:40 AM

குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

Sep 30, 2024 10:40 AM

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மேல் விழுந்ததில் தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் வீட்டின் மேல் விழுந்த மண் அவரது மனைவி ஜெயலட்சுமியை மூடிய நிலையில், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.