​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

Published : Sep 30, 2024 7:52 AM

மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் என் மனசாட்சி தெளிவாக உள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

Sep 30, 2024 7:52 AM

முடா எனப்படும் மைசூரு நகர்ப்புற வாழ்விட திட்ட வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் பின்வாங்கப்போவதில்லை என்றும், தன்னுடைய மனசாட்சி தெளிவாக உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த சில மாதங்களாக அரசியல் ரீதியாக தம்மை எதிர்க்கட்சிகள் தொந்தரவு செய்துவருவதாகவும், தமக்கு மக்கள் ஆதரவு உள்ளதால், என்னை யாராலும் அசைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.