​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்

Published : Sep 29, 2024 8:40 AM

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்

Sep 29, 2024 8:40 AM

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தை சூறையாடினர்.

கோ மங்கலத்தைச் சேர்ந்த அறிவழகன் டூவீலரில் மணலூர் ரயில்வே பாலத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காரிலிருந்த 5 பேரில் 3 பேர் தப்பி ஓடியதால் அவர்களை பிடிக்கக் கோரி கதவு கண்ணாடியை உடைத்ததாக 10 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.