​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டீ சப்ளை செய்வதில் முன்விரோதம் - டீ வியாபாரி கொலை வழக்கில் 7 பேர் கைது

Published : Sep 28, 2024 8:53 PM

டீ சப்ளை செய்வதில் முன்விரோதம் - டீ வியாபாரி கொலை வழக்கில் 7 பேர் கைது

Sep 28, 2024 8:53 PM

புதுச்சேரியில் டீ வியாபாரி கொலை வழக்கில், ரவுடி, 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனாரப்பேட்டையைச் சேர்ந்த டீ வியாபாரி பாபு மேட்டுப்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்றுக் கொண்டிருந்த போது புளியங்கொட்டை என்கிற ரவுடி ரங்கராஜன் தரப்பினர் வழி மறித்து வெட்டிக் கொன்றதாக தெரிவித்த போலீசார், தொழிற்சாலைகளுக்கு டீ சப்ளை செய்வது தொடர்பாக பாபுவிற்கும் ரங்கராஜனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறினர்.