​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள மாநிலம் திருச்சூரில் 3 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளை என தகவல்

Published : Sep 27, 2024 2:23 PM

கேரள மாநிலம் திருச்சூரில் 3 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ.65 லட்சம் கொள்ளை என தகவல்

Sep 27, 2024 2:23 PM

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 3 எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் மெஷின்களை உடைத்து சுமார் 65 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நால்வர் கும்பலை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில் வெள்ளை நிற காரில், முகமூடி அணிந்து வந்த கும்பல், கேஸ் கட்டரை பயன்படுத்தி, சில கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மையங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாப்ரான் ஏ.டி.எம்.மில் 30 லட்ச ரூபாயும், கோலழி ஏ.டி.எம்.மில் 25 லட்ச ரூபாயும், ஷொர்ணூர் ஏ.டி.எம்.மில் ஒன்பதரை லட்சமும் கொள்ளை போனதாக கூறப்படுகிறது.

கொள்ளையடிக்கும் முன்பு ஏ.டி.எம் மையங்களில் பொறுத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மீது இக்கும்பல் பெயிண்ட் ஸ்பிரே அடித்ததாகவும், இதேமாதிரியான சம்பவங்கள் பாலக்காடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய பகுதிகள் நடந்துள்ளதாகவும் திருச்சூர் மாவட்ட எஸ்.பி இளங்கோ தெரிவித்துள்ளார்.