​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் விபத்து.. பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி உயிரிழப்பு..

Published : Sep 26, 2024 3:23 PM

ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் விபத்து.. பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி உயிரிழப்பு..

Sep 26, 2024 3:23 PM

திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் கீழே விழுந்து பின்னால் வந்த டிப்பர் லாரியில் சிக்கி உயிரிழந்தனர்.

கோவில்பாளையத்தை சேர்ந்த மணி - கவிதா தம்பதியினர் வேலைக்கு செல்வதற்காக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நிலைடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறியதில் இருவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.