​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்

Published : Sep 26, 2024 8:10 AM

லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்

Sep 26, 2024 8:10 AM

தரைவழி தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளதாக உள்ளதாக கூறப்படும் நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் லெபனானில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

லெபனானில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்ற சைப்ரஸ் நாட்டில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.