​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலிஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.90 ஆயிரம் மோசடி..

Published : Sep 25, 2024 7:07 PM

போலிஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.90 ஆயிரம் மோசடி..

Sep 25, 2024 7:07 PM

மும்பை போலீஸ் அதிகாரி போல் பேசி, ஓய்வு பெற்ற டிஜிபி மனைவியிடமிருந்து 90 ஆயிரம் ரூபாயை ஜிபே மூலம் பெற்று, மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் வசிக்கும் மறைந்த டிஜிபி ஸ்ரீபாலின் மனைவி டாக்டர் கமலியை தொடர்பு கொண்ட நபர்கள், டிராய் மற்றும் அந்தேரி காவல்நிலைய அதிகாரி பேசுவதாக கூறியுள்ளனர்.

கமலியின் தொலைபேசி எண் மற்றும் ஆதார் கார்டு, வங்கி கணக்கு ஆகியவை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், பண பரிவர்த்தனை விபரங்களை சரி பார்க்க, குறிப்பிட்ட தொகையை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

அதை நம்பி பணத்தை அனுப்பியதாக கமலி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.