​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு

Published : Sep 25, 2024 12:06 PM

விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு

Sep 25, 2024 12:06 PM

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பட்டப்பகலில் நகை கடையில் நூதன முறையில் நகை திருடிவிட்டு தப்ப முயன்ற 3 பெண்களை, கடை உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த 3 பெண்கள் நேற்று நகை வாங்குவது போல சென்று, தங்களிடம் இருந்த போலி கம்மலை ட்ரேயில் வைத்துவிட்டு தங்க கம்மலை எடுத்துக் கொண்டு கடையிலிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டுபிடித்த உரிமையாளர், கூச்சலிட்டதை தொடர்ந்து அவர்களை அப்பகுதி மக்கள் பிடித்தனர்.