​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புத்தகப்பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர்.. தந்தையை அழைத்து டி.சி கொடுத்த பள்ளி நிர்வாகம்

Published : Sep 24, 2024 5:01 PM

புத்தகப்பையில் அரிவாளை எடுத்து வந்த மாணவர்.. தந்தையை அழைத்து டி.சி கொடுத்த பள்ளி நிர்வாகம்

Sep 24, 2024 5:01 PM

திருநெல்வேலி  ஸ்ரீபுரம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், புத்தகப்பையில் அரிவாள் கொண்டு வந்த 10ஆம் வகுப்பு மாணவரை, அவரது தந்தையை வரவழைத்து பள்ளி நிர்வாகம் டி.சி கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.

மாணவரின் புத்தகப்பையில் அரிவாள் இருந்ததாக சக மானவர்கள், உடற்கல்வி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவரிடம் விசாரித்ததில், கொண்டான் நகரம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட சில மாணவர்கள், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததால், பாதுகாப்பிற்காக அரிவாளை கொண்டு வந்ததாக  ஆசிரியரிடம் கூறியுள்ளார்.