​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..

Published : Sep 24, 2024 3:12 PM

ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..

Sep 24, 2024 3:12 PM

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் இருந்து ஆசிரியைகள் 2 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை மீண்டும் தெளிவான முறையில் வழங்க வேண்டும் என ஸ்ரீமதி தாயார் கோரிக்கை வைத்திருந்தார்.

கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நீதிபதி ஸ்ரீராம்  விடுப்பில் உள்ளதால் வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.