​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published : Sep 24, 2024 12:07 PM

திருப்பதி கோயில் முன் சத்தியம் செய்த கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு

Sep 24, 2024 12:07 PM

திருப்பதி மலையில் ஏழுமலையான் கோயில் முன் சத்தியம் செய்த தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கருணாகர ரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து நேற்று திருப்பதிக்கு சென்ற கருணாகர ரெட்டி கோயில் குளத்தில் குளித்து கற்பூரம் ஏற்றி நான் தவறு செய்திருந்தால் என்னுடைய குடும்பம் சர்வநாசமாக வேண்டும் என்று சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது.