​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது

Published : Sep 24, 2024 8:11 AM

ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது

Sep 24, 2024 8:11 AM

ஈரோட்டில், செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்ற தடகள வீராங்கனையை பைக்கில் பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, அதுகுறித்து அவ்வழியாக சென்ற காவலரிடம் செல்வி என்ற அந்த தடகள வீராங்கனை கூறியபோது அவர் காவல் நிலையத்துக்கு சென்று புகாரளிக்குமாறு தெரிவித்ததால், செல்வியும், அவரது நண்பர்களும் திருடர்களை பிடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஒரு சிறார் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த செல்போனை மீட்டு செல்வியிடம் ஒப்படைத்தனர்.