​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்

Published : Sep 23, 2024 12:41 PM

கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்

Sep 23, 2024 12:41 PM

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் சாலை வளைவில் திரும்ப முயன்றபோது நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நெடுமரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் தாம்பரத்தில் உள்ள தனது உறவினர் இறப்புக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி அதிவேகமாக சென்ற மற்றொரு கார் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் வெங்கடேசன் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பலியான நிலையில் மற்றொரு காரில் பயணித்த இருவருக்கும் பலத்த காயம் என போலீசார் தெரிவித்தனர்.