​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராயர் எஸ்ரா சற்குணம்காலமானார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்

Published : Sep 23, 2024 8:01 AM

பேராயர் எஸ்ரா சற்குணம்காலமானார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல்

Sep 23, 2024 8:01 AM

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், பேராயருமாகிய எஸ்ரா சற்குணம் காலமானார். அவருக்கு வயது 86.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட சபையாகிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயராக இருந்து வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். வரும் 26 ஆம் தேதி வானகரம் ஜீசஸ் கால்ஸ் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

எஸ்ரா சற்குணம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.