​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி

Published : Sep 22, 2024 7:51 PM

தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி

Sep 22, 2024 7:51 PM

வால்பாறையில், தேயிலை தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த கரடி ஒன்று, அங்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கட் மாநில தொழிலாளியை கடித்து குதறியது.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள், கரடியை விரட்டிய பின் படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வார விடுமுறையான ஞாயிற்றுகிழமை அன்றும் சில எஸ்டேட் உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வேலை வாங்குவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.