​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு

Published : Sep 20, 2024 6:14 PM

பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு

Sep 20, 2024 6:14 PM

சென்னை, வளசரவாக்கத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர் மற்றும் ரஃபீக் ஆகியோரை தாக்கியதாக அடையாளம் தெரியாத 8 பேர் மீது சிசிடிவி பதிவு ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி மதுபோதையில் தாக்கியதாக கல்லூரி மாணவர் கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மனோவின் மகன்கள் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்யும் தர்மா, விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 4 பைக்குகளில் வந்த 10க்கும் மேற்பட்டோர் கல் மற்றும் கட்டையால் மனோவின் மகன்களை தாக்கும் சிசிடிவி பதிவு ஆதாரத்துடன், மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வளசரவாக்கம் போலீசார் தெரிவித்தனர்.