​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Published : Sep 20, 2024 5:39 PM

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Sep 20, 2024 5:39 PM

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 5 கோடியே 34 லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டு,  இரண்டு மாதங்கள் மட்டும் 68 லட்சம் ரூபாய் வட்டி மட்டும் கொடுத்து பின்னர் மோசடி செய்ததாக பெண் விவசாயி ஒருவர் அளித்த புகாரில், ஆனந்த ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வெளிநாட்டில் வேலை செய்யும் தனது மகன் அனுப்பிய பணத்தை பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூரைச் சேர்ந்த கிரிப்டோ கரன்சி மற்றும் ஆன்லைன் வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்த ஆனந்தராஜிடம் 2022 ஆண்டு முதல் சிறிது சிறிதாக  அளித்ததாக கூறப்படுகிறது.