​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Published : Sep 20, 2024 7:51 AM

தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Sep 20, 2024 7:51 AM

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டாரத்திற்குட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தெருவில் வைத்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

கருங்குளம் வட்டார வள மைய அலுவலகத்திற்கு, காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வாங்க வந்த தலைமை ஆசிரியர்களிடம் கூட்டுறவு சங்கங்கத்தினர் பள்ளி சீருடைகளை விநியோகம் செய்ததாகவும் இதற்கு பல தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சீருடைகள் கொண்டு வருவது குறித்து தன்னிடம் கூட்டுறவு சங்கத்தினர் தகவலளிக்கவில்லை எனவும், இது மிகவும் தவறான செயல் எனவும் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் தெரிவித்தார்.