​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Published : Sep 19, 2024 10:07 PM

முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Sep 19, 2024 10:07 PM

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரவிந்த் என்பவர் தன்னுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, புளியங்குளத்தில் உள்ள முந்திரி காட்டிற்கு அழைத்துச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தன்னை தாக்கி,  விட்டு அந்த பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரவிந்த் அளித்த புகாரின் பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் தப்பி செல்ல முயன்ற  முத்துக்குமார் என்பவர் தவறி விழுந்து காலில் அடிபட்டதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.