​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Published : Sep 19, 2024 1:22 PM

கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Sep 19, 2024 1:22 PM

புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த புகாரில், கன்னியாகுமரி ஆவின் ஊழியர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆவின் இளநிலை ஊழியர்கள் ஐயப்பன், ஜெயபழனி ஆகியோர் தன்னிடம் பணம் வாங்கி, வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாக பேயோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி நாகர்கோவில் நீதிமன்றத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பணமோசடி செய்தது உண்மை என தெரியவந்த நிலையில், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.