​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Published : Sep 19, 2024 12:30 PM

விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Sep 19, 2024 12:30 PM

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த இளைஞர், தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 லட்சம் ரூபாய் அளவுக்கு கையடால் செய்தது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை-சாயல்குடி சாலையில் மண்டபசாலை அருகே சர்க்கரை நாயக்கர் என்பவரின் பெட்ரோல் பங்கில் வசூலாகும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அந்த சம்பவத்திற்கு பிறகு அங்கு வேலை செய்து வந்த ஊழியர் பிரவீன்ராஜ் திடீரென வேலையை விட்டு நின்ற நிலையில், கடந்த மாதம் மீண்டும் வந்து வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அதன்பிறகு தொடர்ந்து பணம் காணாமல் போனதால், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, சர்க்கரை நாயக்கர் தூங்கிக் கொண்டிருக்கும் போது கழட்டி வைக்கப்பட்ட அவரது சட்டைப்பையில் இருந்து லாக்கர் சாவியை எடுத்து பிரவீண்ராஜ் பணத்தை திருடியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.