​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு

Published : Sep 19, 2024 10:10 AM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு

Sep 19, 2024 10:10 AM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த புகாரில்,2018-ல் மழை நீர் வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறப்பட்டிருந்தது.

எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாகவும், இதனால் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 26 கோடியே 61 லட்சம் ரூபாய் அளவில் இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.