​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Published : Sep 18, 2024 5:52 PM

மின்கட்டண உயர்வு: புதுச்சேரியில் இண்டியா கூட்டணி பந்த்

Sep 18, 2024 5:52 PM

உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

ஆங்காங்கே மறியல் நடைபெற்ற நிலையில், நெல்லித்தோப்பில் கல்வீச்சில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்ததில் பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

 

காரைக்காலில் டூவீலரில் பேரணி சென்ற இண்டியா கூட்டணியினர் திறந்திருந்த கடைகளை மூடுமாறு கடைக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து தர்னா செய்தனர்.

 

இண்டியா கூட்டணியினர் நடத்திய பந்த்தால், கடலூர்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் வழியாக சென்னைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.