​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாடுதுறையில் மின் மோட்டார்களைத் திருடிய 3 பேர் கைது

Published : Sep 18, 2024 8:08 AM

மயிலாடுதுறையில் மின் மோட்டார்களைத் திருடிய 3 பேர் கைது

Sep 18, 2024 8:08 AM

சீர்காழியில் விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை திருடியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், ஒரு இருசக்கர வாகனம் என பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் பதுக்கி வைத்திருந்த மின் மோட்டர்களை பறிமுதல் செய்வதற்காக அழைத்து சென்றபோது, 2 பேர் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது கால் தடுக்கி கீழே விழுந்து கை எலும்பு முறிந்ததால் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.