​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரகாண்ட் நிலச்சரிவில் இருந்து பத்திரமாக மீட்பு.. ஊர் திரும்பிய தமிழக யாத்ரீகர்கள்..!

Published : Sep 17, 2024 3:49 PM

உத்தரகாண்ட் நிலச்சரிவில் இருந்து பத்திரமாக மீட்பு.. ஊர் திரும்பிய தமிழக யாத்ரீகர்கள்..!

Sep 17, 2024 3:49 PM

உத்தரகாண்ட் நிலசரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய 10 பேரை அவர்களது உறவினர்கள் வரவேற்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி ஆதிகைலாஷிற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட குழுவினர் தாவகட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 10 பேர் சொந்த செலவில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினர். மற்ற 20 பேரையும் தமிழக அரசு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தது.