​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசில் ஒப்படைப்பு

Published : Sep 17, 2024 1:14 PM

சென்னையில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசில் ஒப்படைப்பு

Sep 17, 2024 1:14 PM

சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

ஓ.எம்.ஆர் கொட்டிவாக்கம் ஒய். எம்.சி.எ மைதானத்திற்கு எதிரே சரக்கு வாகனத்தை முந்தி செல்லும்போது மெட்ரோ பணிக்காக போடப்பட்டிருந்த தடுப்பில் மோதி பேருந்தின் முன் பக்கம் முழுமையாக நொறுங்கியது.

அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை சுற்றி வளைத்து தாக்கி, துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், சோதனைக் கருவியை கொண்டு போலீசார் நடத்திய ஆய்வில் அவர் மது அருந்தியது உறுதியானதால் இந்த விவகாரம் மேல் விசாரணைகாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.