​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலம் மீட்டு தனியார் பள்ளிக்கு சீல்

Published : Sep 16, 2024 12:09 PM

திருவள்ளூர் மாவட்டம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலம் மீட்டு தனியார் பள்ளிக்கு சீல்

Sep 16, 2024 12:09 PM

திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர்.

பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை கடந்த 1993ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்த செயின்ட் ஜான்ஸ் என்ற கல்வி நிறுவனம் மேலும் 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பள்ளி நடத்தி வந்துள்ளது.

2013ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், 22 கோடி குத்தகை பாக்கி நிலுவை வைத்துள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.