​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சக மாணவர்கள் தாக்கியதால் துக்கம்... கல்லூரி விடுதியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

Published : Sep 15, 2024 1:16 PM

சக மாணவர்கள் தாக்கியதால் துக்கம்... கல்லூரி விடுதியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

Sep 15, 2024 1:16 PM

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஞானமணி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் இறுதியாண்டு பயிலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை செய்து வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் தாக்குதலுக்கு உள்ளான பிரேம் சங்கர் மன உளைச்சலில் நேற்றிரவு கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.