​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சனாதனத்தை விமர்சித்தவர்கள் அது பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டனர்: ஆளுநர்

Published : Sep 14, 2024 4:48 PM

சனாதனத்தை விமர்சித்தவர்கள் அது பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டனர்: ஆளுநர்

Sep 14, 2024 4:48 PM

தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக கடுமையாக விமர்சித்து பேசியவர்கள் திடீரென அமைதியாகி தற்போது அது குறித்து பேசுவதையே நிறுத்திவிட்டதாக ஆளுநர் ஆன்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், "ஸ்ரீராமரும் தமிழகமும் இணைப்பிரியா பந்தம்" என்ற நூலை வெளியிட்டு பேசிய அவர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது நாடே ராமரின் பக்தியில் மூழ்கி இருந்த நிலையில், தமிழ்நாட்டில் சிலர் ராமர் வடமாநில கடவுள், தமிழக மக்களுக்கு அவரை தெரியாது என்ற கருத்தை கட்டமைத்ததாக கூறினார்.