​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் புகார்.. வராகி என்பவரை கைது செய்த போலீசார்..

Published : Sep 13, 2024 4:00 PM

ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் புகார்.. வராகி என்பவரை கைது செய்த போலீசார்..

Sep 13, 2024 4:00 PM

50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவாளர் வைத்திலிங்கம் அளித்த புகாரை விசாரித்த மயிலாப்பூர் போலீசார், வராகி மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.